திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/055.திருக்கண்ணெழில்
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
55. திருக்கண்ணெழில்
[தொகு]நூற் குறிப்பு:-
என்னை ஆண்டு கொண்ட குருபரராகிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் அருளடை படுத்த இரு திரு கண்களின் அழகைப் பாடுவது இப்பனுவல்.
காப்பு
நேரிசை வெண்பா
கண்ணகன்ஞா லத்திவர்ந்த கண்ணாளர் காருண்யர்
வண்ண வடிவழகார் மாண்புயர்ந்த - கண்ணெழிலைப்
பாடிப் பராவிடவே பாதமலர் காப்பாகும்
நாடிப் பணிந்தேன் நயந்து.
நூல்
நேரிசை வெண்பா
விண்ணகமும் மண்ணகமும் ஈடிணையில் மாட்சியரே!
அண்ணல்நும் சீரார் அருள்நயனத் - தண்ணளியால்
மன்னும் உயிருய்ந்தோம் மாதவரே! மெய்வழியில்
நன்னலங்கள் பெற்றோம் நயந்து (1)
நயமார் திருநயன நன்னோக்கால் மாந்தர்க்(கு)|r}}
இயல்பாம் பிறப்பாம் இறப்பாம் - துயர்தவிர்ந்தோம்
சாலை வளவரசே! சீர்திகழும் பொன்மேனி
கோலங்காண் கண்ணன்றோ கண் (2)
இரக்கம் அடைபடுத்த ஏரார் நயனம்
சுரக்கும் அருளால் சுரராம் - பரபோகம்
எய்தத் தயைபுரிந்த எம்மான் திருத்தாளில்
பெய்துயிருய்ந் தோங்கும் பணிந்து (3)
பணிந்தோர் பிறவிப் பிணியகல நோக்கும்
அணிதிகழெங் கோமான் அருட்கண் - கணிக்கரிய
காருண்யம் பொங்கும் கலைக்கதிபர் சாலையண்ணல்
பேருரைக்கப் போமே பவம் (4)
ரோகம் தரித்திரியம் துர்மரணம் ஆற்றொண்ணாத்
தாகம் கசப்புறலாம் முத்தாபம் - மாகதியர்
சாலைதெய் வச்சீர் திகழும் திருநயனச்
சீலத்தால் தீரும் தெளி (5)
ஆயிரமாம் சூரியரும் நாணும் அருள்நயனர்
தாயின்மிக் காங்கருணைத் தெய்வத்தின் - நேயமிகும்
நோக்கொன்றால் நான்மறையும் ஆறங்க மும்தெளியும்
தேக்கும் தவச்செல்வச் சீர் (6)
திரிபுரமும் தாமெரித்தார் சீர்நோக்கால் எங்கோன்
விரிகருணை பொங்கும் விழியர் - அரியயன் மால்
ஓருருவாய் வந்தருள்செய் உத்தமர்மெய்ச் சாலையண்ணல்
சீர்பாதம் என்றும் துணை (7)
ஈடில் கருணை இலங்கும் திருநயனர்
கோடி கடந்த குருகொண்டல் - வாடாத்
தவவாய்மை மெய்வழியர் சாலையண்ணல் நோக்கம்
சிவமாக்கும் நம்மைச் சிறந்து (8)
மதிகோடி யும்நிகரில் வள்ளல் நயனம்
விதியும் எமபடரும் வீயும் - கதியருளும்
ஆண்டவர்கள் சீரார் அருட்கண் கடைக்கணித்தால்
மீண்டுய்வர் ஜீவர் விரைந்து (9)
சர்வபுவ னாதியங்கள் தாம்படைத்து வாழ்வருளும்
பர்வதமா மேரு பரமேசர் - நிர்மலர்மெய்
சாலையண்ணல் நோக்கால் சகலவரம் தந்தருள்வார்
கோலங்கண் டுய்வீர் கனிந்து (10)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்