திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/088.அறப்போர்க்கெழுவஞ்சி

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 88. போர்க்கெழுவஞ்சி[தொகு]

இலக்கணம்:-

வலிமையுடைய ஒரு அரசன், தன் நாட்டைக் கவரவென்று படையெடுத்து வந்த பகையரசனை, எதிர்த்துப் போர்க்கெழுதல் போர்க்கெழுவஞ்சி எனப்படும்.

எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத்  தலை சென்று அடல்குறித்தன்று
- தொல்காப்பியம் பொருளதிகாரம்.64
போர்க்கெழு மன்னவர் வஞ்சிப் பூந்தொடை
அணிந்து புறப்படு மடுபடையெழுச்சி
சிறப்பக வலியினால் செப்புதல் போர்க்கெழு
வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே.
- முத்துவீரியம்1071
வேற்றுமைப் பகைவர்மேற் போர்குறித்தேகுவது
வேந்தர் வஞ்சிப்பூ மாலை
வேய்ந்தெழு படைச்சிறப் பாசிரிய வகையினால்
விள்ளல் போர்க் கெழு வஞ்சியாம்
- பிரபந்த தீபிகை  -15
போர்க்கெழு வஞ்சியே போற்றலர் மீதில்
வயவேந்தன் வஞ்சிமாலை யணிந்துசெல்
படையெழுச்சி அகவற் பாவால் பகர்தலே.
- பிரபந்த தீபம் - 57

அறமில்லாச் செயல்கள் பல்கிவிட்ட இது ஞான்று அவற்றை மிகைத்து அறநெறி ஞானச் செங்கோல் ஓச்சும் எம்பெருமான் மெய்வழி தெய்வத் திருப்பெரும் திறத்தைப் போற்றுதல் இப்பனுவலின் நோக்கம்.

அறப்போர்க்கெழுவஞ்சி

காப்பு

வஞ்சி நிலைத்துறை

மெய்வழி அருள்கோனே
உய்வழி தரும்வானே
தெய்வமே பெருமானே
ஐய!நின் பதம்காப்பே!

நூல்

வலிமையின் நிலைப்பேறே
பொலியுமெய் வழி நாதா
கலியனின் இடர்வெல்லப்
புலியென எதிர் கொண்டீர்! (1)

கலிவெ(ல்)ல இயலாது
நலிவுறு அதுகாலை
பொலியுநின் சினநோக்கால்
கலிமடிந் தழிந்தனனே! (2)

கொடைதரு குலதேவே!
தடைபுரி கலியோனைப்
படை கொடு எதிரேற
விடை கொடு இரிந்தானே! (3)

களிபெறு மொழியோய் நின்
அளிமிகு அருளாலே
தெளிவுறு மறை, வெட்ட
வெளிநிறை மெய்யோனே! (4)

மனுவுநின் அருளாலே
நனிசுரர் நிலையாகும்
தனியுயர் பரிசேற்க
இனித்தடை இலதாமே (5)

புறப்பகை என் செய்யும்
அறப்பகை நரகுய்க்கும்
திறமுயர் அறவாழி
மறலியின் அமல் வென்றீர்! (6)

தனையுண ரெனவைத்து
நினையெமக் குரித்தாக்கி
பனைத்துணை பரிசீந்தீர்
வினைக்குவை அழிந்தேகும் (7)

பிறவியின் பிணிதீர
அறவினை புரிந்தீரே
துறவிகட் கரசேநின்
உறவுயிர்த் துணையாமே! (8)

அவதரித் தருள்ஓங்கு
தவவலி வதனாலே
பவவினை பிணிதீர்த்தீர்
சிவகுரு பெருமானே! (9)

உயிர்ப் பிணியதுதவிர
துயர்க்குல மதுகெடவே
தயவருள் துரையேநின்
திருமலர்ப் பதம்துணையே! (10)

போர்க்கெழுவஞ்சி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!