திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/049.திருத்தசாங்கம்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.




49. தசாங்கம்[தொகு]

இலக்கணம்:-

தசம் + அங்கம் = தசாங்கம்.தசம் எனில் பத்து என்னும் எண்ணைக் குறிப்பிடுகின்றது. ஓர் அரசனின் சின்னங்களான. மலை, ஆறு, நாடு, ஊர், பறை, பரி, குதிரை, கரி(யானை), தார்(மாலை) பெயர், கொடி என்பன அப்பத்து.

மலையே, யாறே, நாடே, ஊரே
பறையே, பரியே, களிறே தாரே
பெயரே கொடியே என்றிவை தசாங்கம்
- பன்னிரு பாட்டியல் 140
நேரிசை வெண்பா வால்நிரு பன்பெறும்
தசாங்கத் திணைச்சொலல் தசாங்கப் பத்தாம்
- இலக்கண விளக்கம் 840
பவனமுறு வரசனுக் குற்றிடுத சாங்கமும்
பாடுநே ரிசை வெள்ளையால்
பத்துச் செ யுள்கூற லதுவேத சாங்கமுறு
பத்தென வுரைப் பார்களே
- பிரபந்ததீபிகை 25

என் உயர்க்குயிராகி ஆண்டு கொண்டு அருள் பாலிக்கும் தேவலோக ராஜாதி ராஜராகிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருநாமம், திருவூர், திருநாடு, திருநதி, திருமலை, திருப்புரவி, திருயானை, திருக்கொடி, திருமுரசு, திருமாலை முதலியவற்றைப் பத்து வெண்பாக்களால் இப்பனுவலின் பாடப்பெற்றுள்ளது,

திருத்தசாங்கம்

காப்பு

வையம் உய்ந்திட வந்தவ தாரமே
ஐயன் பொன்னெழில் தாள்மலர் காப்பிதே
மெய்வ ழிதெய்வ வான்புகழ் ஓங்கவே
உய்யப் பாடும் உவந்துத சாங்கமே.

நூல்

திருநாமம்

கலிவெண்பா

சீராயி ரம்கொண்ட தெய்வ தயாபரர்க்குப்
பேராயி ரம்செப்பிற் போதுவதோ - நேர்மெய்
குருஆண் மகரிஷி மார்க்கநன் நாதர்
திருசாலை ஆண்டவர்தாம் செப்பு. (1)

திருவூர்

செயிர்தீர்த்துக் கூற்றுவனின் தீங்ககற்றும் சாலை
உயிர்ப்பயிரேற் றும்ஊர்காண் ஓங்கும் - வியன்புவியில்
பொன்னரங்கர் தன்னனந்தர் போற்றிவணக் கம்புரியும்
இன்னருள்சேர் மெய்வழிச் சாலை. (2)

திருநாடு

எண்ணாயி ரம்கற்பம் யோகம் இருந்தாலும்
எண்ணம்பே ரின்பத்தே நின்றிலங்கும் - பண்ணெழில்சேர்
மெய்குண்ட வானரசு சாலையண்ணல் வாழ்பதிகாண்
மெய்குண்டம் கயிலாயம் காண். (3)

திருநதி

வற்றாது வன்பிறவி வெவ்வினைகள் தீர்த்தருளும்
நற்றேன் சுவைகனியும் நன்னதிகாண் - பொற்றாளில்
தான்பொங்கும் தண்ணெழில்சேர் சீர்பொங்கும் கோன்செங்கை
வான்கங்கை எங்கள் நதி (4)

திருமலை

சார்ந்தவர்மெய்த் தங்கமெனச் சாயுச்யம் தான்வழங்கும்
ஆர்ந்தொளிரும் பொன்னசலம் ஆண்டவர்தான் - கார்கொண்டல்
தான்தவழும் வான்மேரு சற்சனர்கள் காண்மேரு
கோன்மேரு எங்கள் மலை. (5)

திருப்புரவி

ஓர்நொடிக்கு ஓரண்டம் ஓடிப்பாய் வாசியெனும்
சீர்துடிக்கும் வெண்புரவி செம்மலர்த்தாள் - ஆர்ப்பரித்து
அண்ட சராசரங்கள் எங்கும் உலாவிவரும்
அண்டர்கோன் தெய்வப் பரி. (6)

திருயானை

கல்லானைக் கற்பித்து காத்தானைக் காத்தானை
நல்லாணை நற்கதிசேர் வெள்ளானை - வெல்யானை
பேதானை மீதானை நாதானை மெய்யானை
போதானை தெய்வக் கஜம். (7)

திருக்கொடி

வளரும் பிறைவடிவம் வண்ணம்கிள் நாமம்
மிளிரும் கொடிவிண் தடவும் - ஒளிரும்
இசைந்தேமெய் சார்ந்து இனிதுய்ய வம்மின்
அசைந்தசைந்து கூவும் கொடி. (8)

திருமுரசு

“எழும்எழும்” இன்னே எமன்வரும் முன்னே
“தொழும்தொழும்” தெய்வம் பணிகென் - முழங்கும்
“துடும்துடும்” என்று நகரா முரசு
தடும்இடர் உய்மின் இனிது. (9)

திருமாலை

பைந்தார் துளபமதும் பார்மணக்கும் மல்லிகைஅ
ணிந்தா ரெனினும் அனந்தர்தம் - செந்தூர்ச்
சிரோமகுடம் பூண்ட சிரமாலை யஃதே
வரோதயர் வேட்கின்ற தார். (10)

திருத்தசாங்கம் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!