கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்
 

தேசிய விருது பெற்ற பேராசிரியர்

பல்கலைப் பேரறிஞர்

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI


 

விளையாட்டுப் பதிப்பகம்

'லில்லி பவனம்’

8/1, போலிஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,

தி. நகர், சென்னை - 600 017.

தொலைபேசி: 4342232

நூல் விபர அட்டவணை

நூலின் பெயர் : கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

மொழி : தமிழ்

பொருள் : மாணவர்க்கேற்ற பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்

ஆசிரியர் : டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா (1937–2001)

பதிப்பு : திருத்திய நான்காம் பதிப்பு டிசம்பர் 2001

நூலின் அளவு : கிரவுன்

படிகள் : 1200

அச்சு : 12 புள்ளி

தாள் : வெள்ளை

பக்கங்கள் : 128

நூல்கட்டுமானம்: பேப்பர் அட்டைக்கட்டு


விலை : ரூ. 25–00


உரிமை : ஆசிரியருக்கு

வெளியிட்டோர் : விளையாட்டுப் பதிப்பகம்

8/1, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு

தி.நகர், சென்னை - 600 017.

தொலைபேசி: 4342232 O O

அச்சிட்டோர் : எவரெடி பிரிண்டர்ஸ்

தி. நகர், சென்னை - 600 017.

தொலைபேசி: 8252271

முன்னுரை

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று கூறி வாழ்ந்தார்கள் நமது முன்னோர்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடி சரித்திரம் படைத்தவர்கள் அல்லவா!

‘கூடி விளையாடு பாப்பா’ என்று முன்னோர் வழி ஒற்றிப் பாடிய பாரதியும், ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்று உறுதியாகக் கூறியபின் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்று இறுதியையும் சுட்டிக்காட்டிச் சென்றார்.

கூடி வாழ்வதற்குக் குறையாத அன்பும், நிறைவான பண்பும், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும், வேற்றுமை நினையாத குணப்பாங்கும் வேண்டும்.

அத்தகைய அரிய பண்புகளை விளைத்து, அழகுற வளர்க்கும் அதிசய நிலந்தான் ஆடுகளமாகும்.

ஆற்றல் மிகுந்த இளைய தலைமுறையை உருவாக்கி, ஏற்றத் தாழ்வற்ற புதிய சமுதாயத்தை அமைத்துத் தருகின்ற அற்புத சக்தியினைப் பெற்றிருப்பது விளையாட்டுக்களே.

மூன்று வயது குழந்தைகள் முதல், எம். ஏ. வகுப்பு மாணவர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரை எல்லோரிடத்தும் விளையாட்டுத்துறை பொறுப்பேற்று, கற்றுத் தந்து பெற்ற அனுபவத்தின் சாரமே இந்நூல்.

இளைஞர்கள் அனைவரும் விளையாடிப் பழக வாய்ப்பளிக்க வேண்டும். விளையாடிக் களிக்கும் வசதியினைப் பெருக்கி ஊக்குவிக்க வேண்டும்.

அதன் காரணமாகவே, ஓய்வு நேரங்களில் ஒன்றாகக் கூடி உல்லாசமாக விளையாடும் 100 விளையாட்டுக்களை இந்நூலில் தந்துள்ளேன்.

விளையாடிமகிழவும் அலைபாயும் மனம் நீங்கி, சுகமான வாழ்வு பெறவும் வாழ்த்துகிறேன்.

எந்த நிலையிலும் என்மேல் பேரன்பு பூண்டு, வாழ்வின் வழிகாட்டியாகத் திகழும் என் ஆசிரியர், லெட்சுமிபாய் தேசிய உடற்கல்விக் கல்லூரி முதல்வர் டாக்டர் M. ராப்சன் அவர்களை இந்த நேரத்தில் நன்றிப் பெருக்குடன் நினைத்து மகிழ்கிறேன்.

சிறந்த முறையில் நூலாக ஆக்கித் தந்திருக்கும் அச்சகத்தாருக்கும், நூல் வெளியாவதற்கு திரு. ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் மிகவும் அரும்பாடுபட்டிருக்கிறார்.

அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றி.

என் நூல்களனைத்தையும் விரும்பி வாங்கி, ஆதரித்து என் முயற்சிக்குத் துணைதரும் நல்லோர் அனைவருக்கும் நன்றி.

வணக்கம்

ஞானமலர் இல்லம் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

சென்னை - 17.

பதிப்புரை

பல்கலைப் பேரறிஞர். டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக விளையாட்டுத் துறை தமிழ் இலக்கியத்திற்காக வாழ்ந்தவர்.

திருமூலர், திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர் களுக்குப் பிறகு, தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே, மகிமையை வளர்க்கும் பணியைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செய்து வந்தார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையில் நம்பிக்கையுடைய இவர், எங்கும் முதல், எதிலும் முதல் என்பதுபோல, பல அரிய காரியங்களை நிறைவேற்றினார்.

சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்றவை நடத்திய ஓடுகளப் போட்டிகளில் வெற்றி வீரராகத் திகழ்ந்திருக்கிறார்.

தான் பெற்ற வெற்றியும், புகழும் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக ‘விளையாட்டு இலக்கியத் துறை’ என்ற புதிய துறையை உருவாக்கினார்.

முதன் முதலாக விளையாட்டுத் துறை இலக்கிய நூலை 1964ம் ஆண்டில் எழுதிமுடித்த இவர், இதுவரை இருநூறு நூல்களைப் படைத்திருக்கிறார்.

இதற்காக, தான் வகித்து வந்த எல்லாப் பதவிகளையும் விட்டு விட்டு, முழுநேர எழுத்தாளாக வாழ்ந்தார்.

முதன் முதலாக 1987-ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்வதற்கென்று ‘விளையாட்டு இசைப்பாடல்கள்’ என்ற ஒலி நாடாவை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

முதன் முதலாக, தெய்வத்தன்மையுள்ள தேகத்தைத் திறம்படக் காக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1994-ஆம் ஆண்டு "ஓட்டப் பந்தயம்" என்ற திரைப்படத்தை தயாரித்துத் திரையிட்டுள்ளார்.

முதன் முதலாக சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உடல் நலத்தின் மேன்மையை, கடந்த 30 ஆண்டுகளாக உலகுக்கு உணர்த்தி வந்தார்.

முதன் முதலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளிலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, தேகநலத்தின் தேவைகளை தெளிவுபடுத்தி வந்தார்.

விளையாட்டுத் துறைபற்றிய கருத்துக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக, நாளிதழ், வாரஇதழ், மாத இதழ்களில், கட்டுரை, கவிதைகளாக வெளியிட்டுள்ளார்.

முதன் முதலாக ‘உடற் கல்வி மாமன்றம்’ என்ற அமைப்பை 1996ம் ஆண்டுதொடங்கி, மாணவர்களுக்குதேக நலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்ற தேர்வுப் போட்டிகளை நடத்தி, பல ஆயிரம் ரூபாயைப் பரிசாக வழங்கி பணியாற்றி மகிழ்ந்தார்.

வள்ளுவர் தமது திருக்குறளில் உடல் ஒழுக்கம், உடல் நலம் - ஆன்மபலம் முதலியவற்றை வளர்க்கும் விதத்தை வலியுறுத்தி விளக்கியிருக்கிறார் என்பதை, முதன் முதலாக மாறுபட்டு ஆய்வு செய்து திருக்குறள் புதிய உரை என்னும் நூலில் (அறத்துப்பால் மட்டும்) திருக்குறள் ஓர் உடலியல் நூல் என விளக்குகிறார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கை வாழ்ந்த ஒரு சாதனையாளரின் ‘கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்’ என்ற நூலினை நாங்கள் வெளியிடுவதில் மகிழ்கிறோம்.

பதிப்பகத்தார்

பொருளடக்கம்


1. பந்தோடு விளையாட்டுக்கள்


1. 11
2. 13
3. 14
4. 15
5. 16
6. 18
7. 19
8. 20
9. 22
10. 24
11. 26
12. 27
13. 28
14. 30
15. 31
16. 32
17. 33
18. 35
19. 36
20. 37


2. தொட்டோடும் விளையாட்டுக்கள்


21. 39
22. 40
23. 41
24. 42
25. 43
26. 44
27. 46
28. 47
29. 48
30. 50
31. 51
32. 52
33. 53
34. 54
35. 56
36. 58
37. 59
38. 60
39. 61
40. 62
41. 63
42. 64
43. 65
44. 67
45. 69
46. 70
47. 71
48. 73
49. 74
50. 75
3. வகுப்பறை விளையாட்டுக்கள்


51. 77
52. 78
53. 79
54. 80
55. 80
56. 81
57. 82
58. 83
59. 84
60. 85
61. 86
62. 86
63. 87
64. 88
65. 88
66. 89
67. 90
68. 91
69. 92
70. 92


4. போட்டி விளையாட்டுக்கள்


71. 94
72. 95
73. 96
74. 97
75. 98
76. 99
77. 100
78. 101
79. 102
80. 104
81. 106
82. 108
83. 109
84. 110
85. 111
86. 112
87. 113
88. 114
89. 115
90. 116
91. 118
92. 119
93. 120
94. 121
95. 122
96. 123
97. 124
98. 125
99. 126
100. 127